'ரோகித், கோலி, ராகுல் இல்லாத இந்திய டி20 அணி' - அடுத்த 90 நாட்களில் மாற்றம் நிகழும் என ஆகாஷ் சோப்ரா கருத்து

மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு இடம் இல்லாத சூழல் அடுத்த 90 நாட்களில் நிகழலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோகித், கோலி மற்றும் ராகுல் என மூவரும் கடந்த ஆண்டு நவம்பரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடி இருந்தனர். அதன் பின்னர் மூவரும் சர்வதேச டி20 போட்டியில் விளையாடவில்லை. யஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் ‘அட்டாக்கிங் பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்’ விளையாட்டை விளையாடுவதாகவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/EnSBRtg