ஐபிஎல் மூலம் கிரிக்கெட் வளர்கிறதோ இல்லையோ, ஐபிஎல் மூலம் பணமும் புகழும் எகிறுகிறது, இதனால் ஐபிஎல் தொடரில் ஆட உலக வீரர்கள் அனைவருமே அதிக விருப்பம் கொள்கின்றனர். இதில் கடந்த சில சீசன்களாக நடைபெற்று வரும் இன்னொரு நடைமுறை என்னவெனில் ஐபிஎல் ஏலத்தில் விற்காத பவுலர்களை சில அணிகள் தங்கள் அணிகளில் நெட்-பவுலர்களாக, (வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்கள்) சேர்த்துக் கொள்கின்றனர்.
முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இவர்களை அணியில் எடுக்கும் விதமாக இவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி சில பவுலர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் இவர்கள் உலகின் தலைசிறந்த பேட்டர்களுக்கு வீச வாய்ப்பும் கிடைக்கின்றது. கைதேர்ந்த பயிற்சியாளர்கள் இருப்பதால் இவர்கள் தங்கள் பவுலிங்கில் புதிய உத்திகளையும் கற்றுக் கொள்ள முடிகின்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/FjK0eTG