
கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடாத 19 வயதான இளம் வீரர் சுயாஷ் சர்மாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களம் காண செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். லெக் ஸ்பின்னரான அவர் குறித்து யாரும் அறிந்திடாத சூழலில் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை வீண் போகச் செய்யவில்லை. யார் அவர்?
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுக்க 10 அணிகளும் பல கோடி ரூபாய் அளவுக்கு போட்டி போட்டன. இந்த டிமாண்ட் பெற்ற வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் அல்லது டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தங்களது ஆட்டத்திறனை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிரூபித்தவர்கள். ஆனால், சுயாஷின் கதை முற்றிலும் வேறானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/wkclQoO