IPL 2023 | ஆர்சிபி-க்கு எதிராக 'சூப்பர்மேன்' போல ஃபீல்டிங் செய்த ரஹானே!

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ‘சூப்பர்மேன்’ போல அபாரமாக ஃபீல்டிங் செய்து அசத்தியிருந்தார் சிஎஸ்கே வீரர் ரஹானே.

இதில் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பெங்களூரு அணி விரட்டியது. 15 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அந்த அணி. இருந்தும் டூப்ளசி மற்றும் மேக்ஸ்வெல் அபாரமாக பேட் செய்தனர். இருவரும் இணைந்து 126 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் இருவரும் பேட் செய்த போது சென்னை அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸின் 9-வது ஓவரை ஜடேஜா வீசி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/6ezpKNF