சென்னை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கேவின் இன்னிங்ஸை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்ட இந்த காம்போவை சிக்கந்தர் ராசா பிரிந்தார். அதன்படி 37 ரன்களுடன் ருதுராஜ் வெளியேறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/pBF1bSy