ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. முதன்முறையாக டெல்லி அணி இந்த தவறை செய்ததால் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஐபிஎல் நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இந்த ஆட்டத்தில் 145 ரன்கள் இலக்கை கொடுத்த டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/QoUpe7P