கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்நிலையில், தனக்கு பிரியாவிடை கொடுக்க முன்வந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி என்று போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசன் தோனி பங்கேற்று விளையாடும் கடைசி தொடராக இருக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஹோம் போட்டிகள் மட்டுமின்றி அசலூரில் நடைபெறும் ‘அவே’ போட்டிகளின்போதும் ரசிகர்களின் ஆதரவு அமர்க்களமாக உள்ளது. மைதானம் முழுவதும் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து இதைச் சொல்ல முடியும். சென்னை அணி மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடப்பு சீசனில் விளையாடிய போட்டிகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/dfE2AOu