
புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 28-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி கண்ட டெல்லி அணி, நடப்பு சீசனில் பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது.
இந்தச் சூழலில் வெற்றிக்குப் பிறகு டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து, அணியின் பேட்டிங் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தப் போட்டியில் பிரித்வி ஷா மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசன் முழுவதும் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக உள்ள அவர்கள் இருவரும் ரன் சேர்க்க தடுமாறி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ywluAXI