
கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்தவர் 34 வயதான மோகித் சர்மா. நடப்பு சீசனில் அதே அணிக்காக தான் விளையாடிய முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்று மாயம் செய்துள்ளார். அவரது கம்பேக் கதையை பார்ப்போம்.
வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மா, ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். தன் மாநில அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட் சர்க்யூட்டில் அங்கம் வகித்து வருகிறார். 2012-13 ரஞ்சிக் கோப்பை சீசனில் 7 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன் பலனாக ஐபிஎல் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அவரை தொடர்பு கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/RBwkJ5M