
அகமதாபாத்: எதிர்வரும் ஐபிஎல் சீசனின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதனை குஜராத் டைட்டன்ஸ் அணி சமூக வலைதள பதிவின் வழியே அறிவித்துள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி வரும் 31-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி போட்டியை பார்க்க முடியும். முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகின்ற காரணத்தால் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/LrCq8AV