IND vs AUS | இந்தூர் ஆடுகளம் மோசம்: ஐசிசி ரேட்டிங்

துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய இந்தூர் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் மோசம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் மானிட்டரிங் பிராசஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி கடந்த 1-ம் தேதி இந்தூரில் தொடங்கியது. இருந்தும், 2 நாட்கள் மற்றும் ஒரே செஷனில் இந்தப் போட்டியில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இரு அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இந்த ஆடுகளம் சொர்க்கபுரியாக திகழ்ந்தது. முதல் நாளில் 14 விக்கெட், இரண்டாம் நாளில் 16 விக்கெட் மற்றும் மூன்றாம் நாளில் 1 விக்கெட் என மொத்தமாக 31 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. இதில் 26 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/yGJer52