IND vs AUS | இந்திய கேம்ப்பில் அமைதியோ அமைதி: வர்ணனையாளர் மேத்யூ ஹேடன்

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவின் போது முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய ஆடுகளத்தின் தன்மையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் விமர்சித்துள்ளார்.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. அதன் மூலம் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இப்போதைக்கு ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/qhJrW3Y