IND vs AUS 4th Test Day 3 | கோலி அரைசதம்; இந்தியா 289 ரன்கள் குவிப்பு

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 191 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பின்தங்கி உள்ளது இந்தியா. கோலி இந்த இன்னிங்ஸில் அரைசதம் பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. 36 ரன்கள் உடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கியது இந்தியா. ரோகித் - கில் இடையே 74 ரன்களுக்கு கூட்டணி அமைந்தது. ரோகித், 35 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து கில் மற்றும் புஜாரா 113 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/RpEgBm0