IND vs AUS | 3-வது டெஸ்டின் முதல் நாள் கேப்டன் ரோகித்துக்கு மோசமான நாளா?

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு களத்தில் சற்றே மோசமான நாளாக அமைந்துள்ளதாக தெரிகிறது. பேட் செய்தபோது தேவையில்லாத ஷாட் ஆடி விக்கெட்டை இழந்தார். அதேபோல இந்திய அணி பந்து வீசிய போது மூன்று டிஆர்எஸ் வாய்ப்புகளையும் வீணடித்தார்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றி பெற செய்தார் கேப்டன் ரோகித். இன்று தொடங்கிய இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்ட முடிவின் போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/QoawDfp