IND vs AUS 3-வது டெஸ்ட் | முதல் நாளில் 265 ரன்கள், 14 விக்கெட்டுகள்: ஆஸி. முன்னிலை

இந்தூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. முதல் நாளில் இரு அணிகளும் இணைந்து 265 ரன்கள் எடுத்துள்ளன. இன்றைய நாளில் 14 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்தச் சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/TYvIsJz