ஆஸி.க்கு பதிலடியாக ஷுப்மன் கில் சதம் விளாசல் - எதை நோக்கி செல்கிறது அகமதாபாத் டெஸ்ட்?

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான ஷுப்மன் கில் சதம் விளாசிய நிலையில் விராட் கோலி அரை சதம் கடந்தார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 17, ஷுப்மன் கில் 18 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Avmjy6Y