
“வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நலிந்து வரும் அணிகள் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை ஒப்பு நோக்கும்போது முப்பெரும் மூர்த்திகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்தான் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றன” என மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். கேரி சோபர்ஸுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும், 2500 ரன்களையும் எடுத்த ஆல்ரவுண்டராக ஹோல்டர் அறியப்படுகிறார்.
இது தொடர்பாக ஜேசன் ஹோல்டர் கூறும்போது, “இப்போது கிரிக்கெட் உலகம் போய்க்கொண்டிருக்கும் போக்கைப் பார்க்கும் போது மூன்று பெரும் அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தவிர மற்ற அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அரிதாகவே ஆடுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக சராசரி 6-8 டெஸ்ட் போட்டிகளிலேயே மே.இ.தீவுகள் அணி ஆடியுள்ளது. இந்த ஆண்டு 6 போட்டிகளில் ஆடியுள்ளோம். அடுத்த ஆண்டு 6 போட்டிகள். ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் ஆடினால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகள் என்ற மைல்கல்லை எட்ட முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/YE6IRg8