
கடந்த 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தான் கடந்து வந்த சவாலான நாட்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பாட்காஸ்ட் பதிவில் பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ். ஐபிஎல் அரங்கில் பெங்களூரு அணிக்காக சிராஜ் விளையாடி வருகிறார். இதில் அவரது தந்தையின் மரணம், ஆஸ்திரேலியாவில் சந்தித்த இனவெறி ரீதியிலான கமெண்ட் குறித்தும் சிராஜ் பகிர்ந்துள்ளார்.
2020-ல் கரோனா கட்டுப்பாடு காரணமாக ஆஸ்திரேலிய நாட்டுக்கு இந்திய அணி முன்கூட்டியே செல்ல வேண்டி இருந்தது. அதனால் இந்திய அணி, நவம்பர் 13-ம் தேதி அங்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு தொடரில் பங்கேற்றது. இந்த பயணத்தில் முகமது சிராஜ் இடம்பெற்றிருந்தார். அவரது தந்தை முகமது கவுஸ், 2020 நவம்பர் 20-ம் தேதி காலமானார். தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்காமல் இந்திய அணியுடன் பயோ பபூளில் சிராஜ் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/GDdPSRH