
இதுவரை இந்தியாவில் எந்த சர்வதேச ஆடவர் குத்துச்சண்டை போட்டிகளும் நடந்தது இல்லை. ஆனால் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஏற்கெனவே 2006 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் டெல்லியில் நடந்துள்ளன. 2021-ம் ஆண்டிலேயே உலக குத்துச்சண்டை மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வந்தது. ஆனால் ஒப்பந்தத் தொகையை குறித்த காலத்துக்குள் சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்புக்கு வழங்காததால் போட்டியை நடத்தும் வாய்ப்பு செர்பியாவுக்கு சென்று விட்டது.
சென்ற ஆண்டு துருக்கியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றது. இதில் தெலங்கானாவைச் சேர்ந்த நிகத் ஜரீன், ஃப்ளைவெயிட் பிரிவில் வென்ற தங்கப்பதக்கமும் அடங்கும். தற்போது நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 65 நாடுகளிலிருந்து 300-க்கும் அதிகமான குத்துச்சண்டை வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/IqoguDt