
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள நேரு விளையாட்டரங்கில் ஏடிகே மோகன் பகான் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏடிகே மோகன் பகான் அணி அரை இறுதி சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் பெங்களூரு அணியானது மும்பையை தோற்கடித்து இருந்தது. ஏடிகே மோகன் பகான் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால் பதித்துள்ளது. இந்த 5 ஆட்டங்களிலும் அந்த அணி ஒரு கோல் மட்டுமே வாங்கி இருந்தது. லீக் சுற்றில் அணியின் டிபன்ஸ் பலமாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/trilF3h