ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு இரானி கோப்பை

குவாலியர்: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. 59-வது இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இதில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா, ரஞ்சி கோப்பையில் வெற்றி பெற்ற மத்தியபிரதேச அணிகள் மோதின.

முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 484, மத்தியபிரதேச அணி 294 ரன்கள் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 246 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து 437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ம.பி. அணி 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/23bukJs