BAN vs ENG | இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்று வரலாறு படைத்த வங்கதேசம்

டாக்கா: நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது வங்கதேச அணி. டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேசம். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) டாக்கா நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியை 20 ஓவர்களில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுக்க அனுமதித்தது வங்கதேசம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/sOAP3dD