
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 சீசனிலும் விளையாட முடியும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். தோனி, ஃபிட்டாக இருப்பதோடு, வலைப்பயிற்சியில் சிறப்பாக பேட் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 31-ம் தேதி ஐபிஎல் 2023 சீசன் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நரம்பு புடைக்க தெரியும் பைசெப்ஸ் மற்றும் ட்ரைசெப்ஸ் என வலைப்பயிற்சி மேற்கொள்ளும் தோனியின் அண்மைய புகைப்படமே ரெய்னாவின் கருத்துக்கு உயிர் சேர்க்கிறது. ‘சென்னை மண்ணில்தான் எனது கடைசி டி20 போட்டி இருக்கும்’ என தோனி முன்னர் சொல்லி இருந்தார். ஆனாலும் அது எப்போது என தோனி இதுவரை சொல்லவில்லை. அதனால் அது சஸ்பென்ஸாகவே உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/cpG9qsk