WPL பணத்தில் அம்மா, அப்பாவுக்கு கொல்கத்தாவில் வீடு வாங்க வேண்டும்: ரிச்சா கோஷ்

டர்பன்: முதலாவது மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ரூ.1.9 கோடிக்கு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியுள்ளது. இந்நிலையில், அந்த தொகையை கொண்டு அவர் தனது அப்பா, அம்மாவுக்கு வீடு ஒன்று வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5 அணிகள் சார்பில் 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/yBKmxRI