
டெல்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களில் முடிந்துள்ளது. இதற்கு பிட்ச் ஒரு காரணம் என்றால் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸ் மட்டரகமான பேட்டிங் பிரதான காரணமாகும். பிட்சைக் குறை கூறிப் பயனில்லை. இனி இந்தப் போக்கை யாரும் தட்டிக் கேட்கப்போவதுமில்லை. ஆகவே இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் என்பது ரஞ்சி டிராபியை விடவும் மோசமாக இரண்டரை நாட்கள்தான் என்பது வழக்கமாகி வருவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
இப்போது சீனியர் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, கோலி, ரோஹித் சர்மா இருக்கும் போது பிரச்சனையல்ல. நாளை புதிய அணி ஒன்று உருவாகும்போது இத்தகைய அணுகுமுறை இந்திய கிரிக்கெட்டை அதலபாதாளத்திற்கே இட்டுச் செல்லும் என்ற எச்சரிக்கை தேவை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7KJ9zIp