IND vs AUS முதல் டெஸ்ட்| இந்திய அறிமுக வீரர் கே.எஸ்.பரத்துக்கு அம்மாவின் அன்பு முத்தம்!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டுள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ்.பரத். நாட்டுக்காக அவர் விளையாடும் முதல் சர்வதேச போட்டி இது. அதை முன்னிட்டு அவரை அணைத்து, முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார் அவரது அம்மா.

29 வயதான அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார். ரஞ்சிக் கோப்பை தொடரில் முச்சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தவர். கடந்த 2019 முதல் பேக் அப் விக்கெட் கீப்பராக அவ்வப்போது அணியில் இடம்பெற்று வருகிறார். இருந்தபோதும் ஆடும் லெவனில் அவருக்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SjvrLgU