மிகவும் ஜாலியாக பேசுவதிலும் நகைச்சுவையாக சில விஷயங்களை அணுகுவதிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பெயர் பெற்றவர். ஆஸ்திரேலிய அணி 2-0 என்று டெஸ்ட்டில் தோற்றதோடு மொத்தமே 2 டெஸ்ட்களும் 5 நாட்களில் முடிந்து போனது. ஸ்ரீகாந்த் ஸ்டைலில் கூற வேண்டுமானால், ஆஸ்திரேலியா 2 டெஸ்ட்களில் பொட்டலம் கட்டப்பட்டனர்.
நாக்பூரிலும் டெல்லியிலும் குட்லெந்த் ஸ்பாட்களில் தண்ணீரே காட்டாத வறண்ட, பந்துகள் தாழ்வாகவும் குழியில் பட்டு எம்பும் விதமாகவும் போடப்பட்ட பிட்சில் ‘பொட்டலம்’ ஆகியுள்ளனர். நாக்பூரில் படுமோசமாக 2வது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு காலியாகி இன்னிங்ஸ் தோல்வியடைந்தனர். டெல்லியில் கொஞ்சம் முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடி இந்திய அணியையும் தங்கள் ஸ்கோருக்கு அருகேயே சுருட்டி ஃபைட் கொடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/kVCE86m