துபாய் தொடரில் முதல் சுற்றில் தோல்வி: டென்னிஸ் களத்தில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா

துபாய்: WTA துபாய் டூட்டி ஃப்ரீ சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் 4-6, 0-6 என நேர் செட் கணக்கில் ஆட்டத்தை அமெரிக்க இணையருடன் சேர்ந்து இழந்துள்ளார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இது டென்னிஸ் களத்தில் அவர் விளையாடும் கடைசி போட்டியாகும்.

இந்தியாவைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் ஒற்றையர் பிரிவில் மிகவும் பிஸியாக கிராண்ட் ஸ்லாம் உட்பட பல்வேறு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வந்தார். அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/1c2pCZT