மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை கேப்டன் பதவி தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தத் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே.எல்.ராகுல் அதிக ரன்களைக் குவிக்காமல் ஆட்டமிழந்து வருகிறார். அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/OJ8yPeM