இந்திய அணியில் இரு கோஷ்டிகள்: கோலி கேம்ப், ரோஹித் சர்மா கேம்ப்- ஆர்.ஸ்ரீதரின் அதிர்ச்சிகர தகவல்

சமூக ஊடகங்களின் வரவினால் உலகில் நட்புகள் உருவாகவும் செய்கின்றன, பல ஆண்டுகால நட்புகளும் துயரத்திலும் முடிந்து விடுகின்றன. இது சாதாரண மனிதர்களுக்கே நிகழ்கிறது எனும்போது சூப்பர் ஸ்டார்களான ரோஹித் சர்மா, விராட் கோலிக்கும் இடையேயான் நட்பிலும் நிகழாதா? அப்படித்தான் நிகழ்ந்தது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் “கோச்சிங் பியாண்ட்” என்ற புதியப் புத்தகத்தில் இந்திய அணியில் கோஷ்டி மோதல் பற்றிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ரவி சாஸ்திரியினால் தான் அந்த கோஷ்டி மனோபாவம் முடித்து வைக்கப்பட்டதாக ஆர்.ஸ்ரீதர் எழுதியுள்ளார். இதுவரை ஆர்.ஸ்ரீதர் எழுதியதில் வெளிவந்ததில் அவர் ரவி சாஸ்திரியின் புகழ்பாடுபவர் என்ற ஒன்று வெளிப்பட்டுள்ளது. ஆனால் அவர் எழுதும் இத்தகைய விஷயங்களில் உண்மை இல்லாமல் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/LWUY6Tc