போச்சுரா! இது வேறயா?- தென் ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை தகுதியில் எழுந்த புதிய சிக்கல்

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா நேரடியாக தகுதி பெறுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா பணமழை லீகுக்காகவும், அதில் முதலீடு செய்த இந்திய தொழிலதிபர்களின் நலன்களுக்காகவும், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் நன்மைக்காகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ரத்து செய்ததிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பித்தது இந்தத் தலைவலி.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றினாலும் கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது உலகக் கோப்பை தகுதிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. இது போதாதென்று ஓவர்களை குறித்த நேரத்தில் வீசாததால் உலகக்கோப்பை சூப்பர் லீக் பாயிண்ட்களில் ஒரு புள்ளியையும் இழக்க நேரிட்டது. குறித்த நேரத்தில் பந்து வீச வேண்டிய கட்டாய ஓவர்களில் ஒரு ஓவர் குறைவாக வீசினர். இதையடுத்து முன்னர் 79 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா ஒரு புள்ளியை இழந்து தற்போது 78 புள்ளிகளுடன் உள்ளது. ஒரு புள்ளிதானே இதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம், ஆனால் அதுதான் விஷயம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/uVCURLA