வெலிங்டனில் இன்று தொடங்கிய இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து அணி. தொடக்கத்திலேயே இங்கிலாந்தின் 3 விக்கெட்டுகளை சாய்த்து அச்சுறுத்தினர் நியூஸிலாந்து வீரர்கள். ஆனால், அதன் பிறகு கிரிக்கெட் உலகின் நவீன டெஸ்ட் அதிரடி மன்னன் ஹாரி ப்ரூக், 169 பந்துகளில் 184 ரன்களையும், ஜோ ரூட் 101 ரன்களையும் விளாசி முதல் நாள் ஆட்ட முடிவில் அதே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இங்கிலாந்தை 315 ரன்கள் எடுக்க செய்தனர்.
இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 294 ரன்களை 61 ஓவர்களில் அதிரடியாக விளையாடி சேர்த்தனர். ‘விக்கெட் விழுந்தால் என்ன? என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என ஹாரி ப்ரூக் இறங்கி வந்து ஆடி 10 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் அரைசதம் கண்டார். உணவு நேர இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/iI3FX4R