
கொல்கத்தா: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வது எங்கள் மாநிலத்தின் கிரிக்கெட் ஐகானான புஜாராவுக்கு சிறந்தவொரு காணிக்கையாக இருக்கும் என தெரிவித்துள்ளார் சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெல்லி டெஸ்ட் போட்டியில் புஜாரா தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்நிலையில், இதனை தெரிவித்துள்ளார் உனத்கட்.
நாளை (வியாழன்) துவங்கும் ரஞ்சிக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வங்காளம் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் விளையாட உள்ளன. இந்த போட்டியில் சவுராஷ்டிராவை உனத்கட் கேப்டனாக வழிநடத்துகிறார். கடந்த டிசம்பரில் சவுராஷ்டிரா அணி விஜய் ஹசாரே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/mC45TdN