'நாலுதெச திறந்திருக்கு... நடக்குற தெம்பிருக்கு... முன்னே நீ எட்டு வையடா' - ஊன்றுகோலை தாங்கி நடக்கும் பந்த்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பந்த் காயம்பட்ட நிலையில் ஊன்றுகோலை தாங்கியபடி நடக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவர் விரைந்து நலம் பெற வேண்டி தங்களது அன்பை அந்த பதிவில் பொழிந்து வருகின்றனர்.

2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/NC2AlLI