‘மனசுல போராட துணிவு இருக்கு’ - மீண்டும் ஒற்றைக் கையில் பேட் செய்த விஹாரி!

இந்தூர்: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இரண்டாவது முறையாக ஒரே கையை கொண்டு, இடது கையால் பேட் செய்து அசத்தியுள்ளார் ஹனுமா விஹாரி. காயம்பட்டபோதும் களமிறங்கி கவனம் ஈர்த்துள்ளார் அவர்.

இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆந்திரப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களை குவித்து ஆள் அவுட்டானது. தொடர்ந்து மத்தியப் பிரதேச அணி 228 ரன்களை எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆந்திரா 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மத்திய பிரதேச அணி விரட்டி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/WNl0egv