ஆடுகளங்கள் ‘நியாயமாக’ அமைந்தால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸி. வெல்லும்: இயன் ஹீலி

சிட்னி: எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது முகாமிட்டுள்ளது. இங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாட உள்ளது. இந்நிலையில், இயன் ஹீலி இப்படிச் சொல்லியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7KykUEs