ஆஸ்திரேலிய அணி பயிற்சி செய்ய அனுமதி கோரிய மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு - ஆட்ட உணர்வற்ற செயல்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா வெறும் 91 ரன்களில் மடிந்தது. முதல் இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளைச் சாய்க்க, 2வது இன்னிங்சில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கொதகொதவென்று ஆக்கப்பட்ட ரஃப் பகுதியை பயன்படுத்தி அஸ்வின் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதைப் பெரிய பவுலிங் என்று சொல்வதற்கில்லை. ஆஸ்திரேலிய பேட்டர்களின் போதாமைதான் இதற்குக் காரணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/bqm7SJE