
பியூனஸ் அயர்ஸ்: கடந்த டிசம்பர் மாதம் உலகக் கோப்பையை வென்றதும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடங்கியதாக தெரிவித்துள்ளார் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர். உலகக் கோப்பையுடன் அவர் கொடுத்திருந்த உற்சாக போஸ் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை அள்ளி இருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் பிரான்ஸ் அணியுடன் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் விளையாடியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வீழ்த்தி இருந்தது. இந்தத் தொடரில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மெஸ்ஸி வென்றார். மொத்தம் 7 கோல்களை அவர் உலகக் கோப்பை 2022 தொடரில் பதிவு செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/I6GJPid