
மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் சேத்தன் சர்மா. அண்மையில் இவர் இந்திய கிரிக்கெட் அணி குறித்த சில பகீர் தகவல்களை பகிர்ந்திருந்தார். இதனை தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அவர் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 டிசம்பரில் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார் சேத்தன் சர்மா. இந்திய அணியின் முன்னாள் வீரர் இவர். 23 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். டி20 உலகக் கோப்பை 2021, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை 2022 உட்பட பல்வேறு தொடர்களுக்கான இந்திய அணியை அவர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/uNRw3MI