
நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய தினம் ரோகித், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் இந்திய அணிக்காக சிறப்பாக பேட் செய்துள்ளனர்.
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து இந்திய அணி நேற்று முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது இந்தியா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/wKsrHDf