
புது டெல்லி: பாகுபலி முதல் பாகத்தில் அமரேந்திர பாகுபலி, தன்னை நோக்கி வரும் அம்புகளை வாள் கொண்டு அபாராமாக ஒரு காட்சியில் தடுப்பார். அந்தக் காட்சி அப்படியே கிரிக்கெட் களத்தில் அப்ளை செய்தால், அதற்கு கச்சிதமாக பொருந்திப் போகும் பேட்ஸ்மேன் என்றால், அது புஜாரா மட்டுமே. இங்கு பந்துகள்தான் அம்புகள். அவரது பேட்தான் வாள். வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி புஜாரா விளையாட உள்ள 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரையில் இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7,021 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 44.45. மொத்தம் 15,797 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/wgt0kDm