
ராஜ்கோட்: இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுள்ளது.
229 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கடந்த முறை சிறப்பான துவக்கம் கொடுத்த நிசாங்கா மற்றும் குஷல் மெண்டிஸ் இணை இம்முறை விரைவாகவே ஆட்டமிழந்தது. பவர் பிளே வரை தாக்குப்பிடித்த இந்தக் கூட்டணியை அக்சர் படேல் பிரித்தார். முதல் விக்கெட்டாக குஷல் மெண்டிஸ் 23 ரன்களுக்கு வெளியேற, அடுத்த மூன்று பந்துகளில் நிசாங்காவை 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் அர்ஷ்தீப் சிங். அடுத்த ஓவரை வீசிய கேப்டன் பாண்டியா பெர்னாண்டோவை 1 ரன்னுக்கு நடையைக் கட்ட வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/AwVzbSl