
கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 374 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எட்டி இருந்தது. அந்த அணியின் கேப்டன் ஷனகா அபாரமாக விளையாடி சதம் விளாசி இருந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் அந்த அணி இழந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடரின் முதல் போட்டி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/YTDahqp