
இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 208 ரன்கள் விளாசித் தள்ளினார். இது உண்மையில் ஒரு கிளாசிக் இன்னிங்ஸ் வகையாகும். இஷான் கிஷன் அடித்தது காட்டடி தர்பார் என்றால், இது கிளாஸ் ரகத்தைச் சேர்ந்தது.
ஆனால், சுப்மன் கில்லின் தந்தை சுப்மன் கில் இதை முன்னரே செய்திருக்க வேண்டும் என்றும், இரட்டைச் சதத்தை இலங்கைக்கு எதிராகவே அடித்திருக்க வேண்டும் என்றும் அதிருப்தியுடன் கூறியதாக பஞ்சாப் வீரரும், குஜராத் டைட்டன்ஸ் வீரருமான குர்கீரத் மான் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/d3axGmz