
சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தில் 386 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான நாராயண் ஜெகதீசன் சதம் விளாசினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட் செய்தது. சாய் சுதர்சன் 2, பாபா அபராஜித் 23 ரன்களில் வெளியேறினர். 3-வது விக்கெட்டுக்கு நாராயணன் ஜெகதீசனுடன் இணைந்த பாபா இந்திரஜித் இன்னிங்ஸை கட்டமைத்தார். சிறப்பாக விளையாடி வந்த பாபா இந்திரஜித் 113 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் சித்தார்த் பந்தில் ஆட்டமிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MX7cR4g