
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ சனிக்கிழமையன்று இந்திய மூத்த அணித் தேர்வுக்குழுவை அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறியதையடுத்து சேத்தன் சர்மா தலைமை குழு கலைக்கப்பட்டது, இப்போது 2 மாதங்கள் சென்று மீண்டும் சேத்தன் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) உறுப்பினர்களான சுலக்‌ஷனா நாயக், முன்னாள் இந்திய வீரர் அசோக் மல்ஹோத்ரா, மற்றும் ஜதின் பாரஞ்ச்பே ஆகியோர் இந்த அணித்தேர்வுக் குழுவைத் தேர்ந்தெடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/D3NMqxk