“எப்போதுமே இந்திய அணிக்கு இதுதான் பிரச்சினை” - நியூஸி.யை போராடி வென்றது குறித்து சுனில் கவாஸ்கர்

மும்பை: “டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடியாதது எப்போதுமே இந்திய கிரிக்கெட் அணியின் பிரச்சினையாக உள்ளது” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சொல்லியுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 350 ரன்கள் இலக்கை நெருங்கி வந்து ஆட்டத்தை இழந்திருந்தது நியூஸிலாந்து. அந்த அணி 337 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/lqtyO4B