கடைசியாக ஒருமுறை சக வீரர்களுடன் டீம் பஸ்ஸில் செல்வதை இழக்க விரும்பவில்லை: ஓய்வுக்கு முன் தோனி உருக்கம்

இங்கிலாந்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பையும், அதிர்ச்சியையும் கொடுத்த தொடர். ஆம், நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியுடன் தோனி தான் ஓய்வு பெறப்போவதை சூசகமாக ரிஷப் பந்த் இடம் தெரிவித்தது அன்றைய தினம் தான்.
ஜூலை மாதத்தில் நடந்த அந்தப் போட்டியில் நியூஸிலாந்தை இந்திய அணி 239 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது. புவனேஷ்வர் குமார் 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா, ஜடேஜா சிக்கனமாக வீச, சஹல் 10 ஓவர்களில் 63 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 10 ஓவர்களில் 55 ரன்களையும் கொடுத்து கொஞ்சம் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BUrlJDP