கடைசி ஓவரை தானே வீசி பாண்டியாவுக்கு பாடம் கற்பித்த ஷனகா... அர்ஷ்தீப் சிங்கின் 'நோ பால்'கள் - ஓர் அலசல்

முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை தான் வீசாமல் அக்சர் படேலிடம் கொடுத்து தப்பித்த ஹர்திக் பாண்டியா, 2-வது டி20 போட்டியிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் படியாக 2 ஓவர்களை மட்டுமே வீசி 4 ஒவர்களை பூர்த்தி செய்யாமல் விட்டார். இதனால் மற்ற பவுலர்கள் செம அடி வாங்கியதில் இந்தியா தோற்றது. மாறாக, இலங்கை கேப்டன் ஷனகா கடைசி ஓவரில் இந்தியாவுக்கு தேவை 20 ரன்கள் என்ற நிலையில், தானே வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெறும் 4 ரன்களையே கொடுத்து வெற்றி பெறச் செய்தார்.

ஹர்திக் பாண்டியா போன்ற ஐபிஎல் கேப்டன்களை தேசிய அணிக்குக் கேப்டனாக்கினால் இப்படித்தான் ஆகும். அவர் ஏன் பந்து வீச தயங்குகிறார்? காயம் ஏற்படும் பயம்தான். காயம் ஏற்பட்டுவிட்டால் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஆட முடியாமல் போய் விடுமே? அதுதான் ஹர்திக் பாண்டியாவின் கவலை. 14-வது ஓவர் முடிவில் இலங்கை 113/4. கடைசி 6 ஓவர்களில் 83 ரன்கள். இலங்கை கேப்டன் ஷனகா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 56 ரன்களை விளாசித் தள்ளினார். ஸ்கோர் 113/4-லிருந்து 206 ரன்களுக்குச் சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/sWpCm0H