“ரிச்சர்ட்ஸ், சச்சின், கோலியை தெரியும். ஆனால், சூர்யகுமார் நூற்றாண்டுப் பூ!” - கபில் தேவ்

இலங்கைக்கு எதிராக 3-வது டி20 போட்டியில் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய, ஒருமுனையில் ‘அடித்து நொறுக்குவதன்றி வேறொன்றறியேன் பராபரமே’ என்று இலங்கை பந்துவீச்சை புரட்டி எடுத்து 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசி தொடரை வெல்வதற்கு வித்திட்ட இந்தியாவின் ஏ.பி.டிவில்லியர்ஸ், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ் நூறாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர் என்று கபில் தேவ் புகழ்ந்து, அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் ஒருமுனை, வேறுமுனை என்பது போல் சூரியகுமார் யாதவ் எங்கு போட்டாலும் அடி... எப்படிப் போட்டாலும் அடி என்ற ரீதியில் அனாயாச மட்டைச் சுழற்றலில் ஈடுபட்டு அனைவரையும் பிரமிக்கச் செய்தார். ஷாட்கள் அப்படி. அதுவும் இருமுறை ஆஃப் திசையில் சாய்ந்து கிட்டத்தட்ட கீழே விழுமாறு சென்று பந்தை பைன்லெக்கில் சிக்சர்களுக்கு விளாசியது சூர்யா ஸ்பெஷல் மற்றும் கண்கொள்ளாக் காட்சி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/HSrGzMk